தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம்: அமைச்சர் துவக்கி வைப்பு

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் 2019 - 2020 ஆண்டிற்கான தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைத்தார்.

minister senkotaiyan issue laptop

By

Published : Jul 15, 2019, 2:03 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா நாகர்கோவில் அருகே சுங்கான்கடை பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.

இதில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்று சுமார் 30 கோடி ரூபாய் மதிப்பில் 24 ஆயிரத்து 736 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மடிக் கணினி வழங்கும் திட்டத்தை அமைச்சர் குத்துவிளக்கு ஏற்றி துவங்கி வைத்தார்.

விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா

அதன்பின், மாணவ - மாணவிகளுக்கு விலையில்லா மடிகணினி வழங்கிய அமைச்சர், அரசின் சாதனைகளை விளக்கி பேசினார்.

இந்த விழாவில் அம்மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே , தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் பிரின்ஸ் மற்றும் ராஜேஷ்குமார் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details