தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 10, 2023, 9:42 PM IST

ETV Bharat / state

ரப்பர் தோட்ட குடியிருப்புக்குள் புகுந்த ராஜநாகம் - போராடி பிடித்த வனத்துறை

கன்னியாகுமரி மாவட்டம் பால்குளம் அருகே ரப்பர் தோட்ட குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த ராஜநாகத்தை வனத்துறையினர் உயிருடன் பிடித்து அருகில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் கொண்டு விட்டனர்.

Etv Bharat ரப்பர் தோட்ட குடியிருப்புக்குள் புகுந்த ராஜ நாகம்
Etv Bharat ரப்பர் தோட்ட குடியிருப்புக்குள் புகுந்த ராஜ நாகம்

ரப்பர் தோட்ட குடியிருப்புக்குள் புகுந்த ராஜ நாகம்

கன்னியாகுமரி:தென்கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள காடுகளில் ராஜநாகம் அதிமாக உள்ளன. தாய்லாந்து மற்றும் இந்தியாவிலும் அதிமாக காணப்படுகின்றன. இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலை காடுகளில் வாழ்ந்து வருகின்றன. தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்ட காடுகளில் அதிக அளவில் காணப்படுகின்றன. பெரும்பாலும் அடர்ந்த காட்டுப் பகுதிகளில் வசிக்கும் ராஜநாகம் நீர் நிறைந்த பகுதிகளில் வாழ்கின்றன.

தாய்லாந்து நாட்டில் இயங்கும் செஞ்சிலுவை சங்கமும் இந்திய மத்திய ஆராய்ச்சி மையமும் இதன் விஷத்தை முறிக்க மருந்துகள்
கண்டுபிடித்துள்ளது. இதுவரை இரண்டு மருந்துகள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவை இரண்டு மருந்துகளும் தேவைக்கு ஏற்ப கிடைக்காததால் பாம்பு கடி விஷத்தால் பலரும் இறந்து விடுகின்றனர்.

கொடிய விஷத்தன்மை கொண்ட பாம்பான ராஜநாகம் சமீபத்தில் கன்னியாகுமரி மாவட்டம் வன பகுதிகளிலுள்ள குடியிருப்புகளில் காணப்பட்டு வருகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன்பாக தடிக்காரண் கோணம் அருகே அரசு ரப்பர் கழக லோயர் காலனியில் 13 அடி நீளம் கொண்ட ராஜ நாகம் பிடிபட்டது. அந்த பீதி ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் மத்தியில் அடங்குவதற்குள் மீண்டும் பால்குளம் அருகே ரப்பர் தோட்ட குடியிருப்பு பகுதியில் ராஜநாகம் காணப்பட்டுள்ளது.

குடியிருப்பு மக்கள் அழகியபாண்டிபுரம் வனச்சரக அலுவலகத்திற்கு மிகப்பெரிய பாம்பு ஒன்று நுழைந்து விட்டதாக
தகவல் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் வனத்துறை குழுவினர் சம்பந்தப்பட்ட குடியிருப்பு பகுதிக்குச் சென்று மூன்று மணி நேரம் போராடி பாம்பை பிடித்தனர். அது கொடிய விஷத்தன்மை கொண்ட 12 1/2 அடி நீளம் கொண்ட ராஜ நாகம்
என்பது தெரியவந்தது.

யாரையாவது கடித்திருந்தால் அவர்களை காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டிருக்கும். வெரும் 5 நிமிடங்களில் அவர்கள் கோமா நிலைக்குச் சென்று பின்னர் இறந்து விடுவார்கள். வனத்துறையினர் அந்த பாம்பை லாபகரமாக பிடித்து அருகில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் கொண்டு விட்டனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரி கூறும்போது, “ராஜநாகம் முட்டை இட்டு குஞ்சு பொரிக்கின்றது. ராஜநாகத்தின் இனச் சேர்க்கை என்பது ஜனவரி மாதத்தில் இருந்து மார்ச்சு மாதம் வரை நடக்கும். பின்னர், ஏப்ரல் மாதம் முதல் மே மாதம் வரை பெண் ராஜநாகம் முட்டைகளை இடுகின்றன.

ஒரே நேரத்தில் 20 முதல் 30 முட்டைகள் வரை இடும். தாய் நாகம் முட்டைகளை வேறு விலங்குகளிடம் இருந்து பாதுகாக்கும், அதற்கு இருக்கும் வெப்பம் சீராகவும் மாறாமல் இருக்க காய்ந்த இலைகளை குவித்து அதனுள் முட்டைகளை வைத்து பாதுகாக்கும். ஒருவேளை தற்பொழுது இந்த பகுதிகளில் காணப்படும் ராஜநாகம் முட்டைகளை வெளியிடுவதற்காக இந்தப் பகுதிகளில் இருந்திருக்கலாம். இது குறித்து ஆய்வுகளும் மேற்கண்டு வருகிறோம்” என தெரிவித்தார்.

மேலும் கன்னியாகுமரி மாவட்ட வனப்பகுதிகளில் அதிகாலையில் ரப்பர் பால் வெட்டும் வேலைக்கு ஆயிரக்கணக்கான மக்கள் சென்று வருகின்றனர். இவர்கள், ஏற்கனவே பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வேலை செய்து வருவதாக புகார்கள் தெரிவித்து வந்த நிலையில் தற்போது இந்த பகுதிகளில் ராஜ நாகத்தை வனத்துறையினர் பிடித்திருப்பது இந்த பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:Coimbatore White Cobra: கோவையில் பிடிபட்ட 5 அடி வெள்ளை நாகப்பாம்பு வீடியோ!

ABOUT THE AUTHOR

...view details