தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 4, 2020, 1:13 PM IST

ETV Bharat / state

வெளிநாட்டு நீர்வாழ் பறவைகளை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

கன்னியாகுமரி: வெளிநாட்டு நீர்வாழ் பறவைகள் குறித்த கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்கியது.

வெளிநாட்டு நீர்வாழ் பறவைகளை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்
வெளிநாட்டு நீர்வாழ் பறவைகளை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

ஐரோப்பியா, சைபீரியா, ரஷ்யா, மங்கோலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் பிப்ரவரி மாதம்வரை கடும் குளிர் ஏற்படும். இதனால் பறவைகள் அங்கு வாழ முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் பறவைகள் இந்தியாவில் உள்ள முக்கிய இடங்களுக்கு இடம்பெயர்கின்றன. தென்மாவட்டங்களில் குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளில் அதிகமான வெளிநாட்டு பறவைகள் வந்து முகாமிடுகின்றன.

அந்த வகையில் வெளிநாடுகளில் உள்ள பிளம்பிங்கோ, ஊசிவால் வாத்து, உள்ளான் வகைகள் , சோவலர் வாத்து இனங்கள், ரெட் சேன், கிரீன் சேன் உள்ளிட்ட பல்வேறு வகையான வெளிநாட்டு பறவைகளும், இந்தியாவின் வட மாநிலங்களில் உள்ள கூழை கடா, பல்வேறு நாரை, கொக்கு இனங்கள் உள்ளிட்ட உள்நாட்டு பறவைகளும் நாகர்கோவில் அருகே உள்ள மணக்குடி, சுசீந்தரம், தேரூர், சாமிதோப்பு, புத்தளம் ஆகிய பகுதிகளில் உள்ள பறவைகள் சரணாலயத்தில் முகாமிட்டுள்ளன.

வெளிநாட்டு நீர்வாழ் பறவைகளை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

இந்நிலையில், நீர்நிலை பறவைகளின் கணக்கெடுக்கும் பணிகள் நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிகளான மணக்குடி, சாமிதோப்பு, புத்தளம் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் இன்று நடைபெற்றது. இதில் வனத்துறையினர், தன்னார்வலர்கள், மாணவர்கள் அடங்கிய ஏழு குழுக்கள் அமைக்கப்பட்டு பல்வேறு பகுதிகளில் கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்றுவருகிறன.

கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு வெளிநாட்டு பறவைகளின் வரத்து குறைந்துள்ளது எனவும் பறவைகளை அச்சுறுத்தும் வகையில் செயல்படும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பறவைகள் ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: கடலோர மாவட்டங்களில் 4 நாள்கள் மழைக்கு வாய்ப்பு

ABOUT THE AUTHOR

...view details