தமிழ்நாடு

tamil nadu

தேங்காய்பட்டினம் மீன் பிடி துறைமுகத்தில் படகு கவிழ்ந்து மீனவர் மாயம்

By

Published : Nov 5, 2020, 1:32 PM IST

கன்னியாகுமரி: தேங்காய்பட்டினம் மீன் பிடி துறைமுகத்தில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளனாதில் மீனவர் ஒருவர் மாயமாகியுள்ளார்.

Fishing
Fishing

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினம் மீன் பிடி துறைமுக முகத்துவாரத்தில் மண்திட்டுகள் காணப்படுவதால் கடந்த 5 மாதங்களில் மீன் பிடிக்க கடலுக்கு சென்ற படகுகள் கவிழ்ந்து நான்கு மீனவர்கள் பலியாகியுள்ளனர்.

இதனிடயே முகத்துவாரத்தில் ஏற்படு உள்ள மணல் திட்டுகளை அகற்றகோரி மீனவ கிராமங்களில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று (நவம்பர் 5) அதிகாலை பூத்துறை மீனவ கிராமத்தை சேர்ந்த பெரின் (31) என்பவருக்கு சொந்தமான படகில் அவருடன் சேர்த்து ஆறு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க புறப்பட்டனர். அப்போது முகத்துவாரத்தில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

இதில் ஐந்து மீனவர்கள் நீந்தி கரைசேர்ந்தனர். ஆனால், பெரின் மாயமானார். அவரை சக மீனவர்கள் ஐம்பது படகுகளில் தேடி வருகின்றனர். இதற்கிடையில் முகத்துவாரத்தை சீரமைக்க உடனே நடவடிக்கை எடுக்காவிட்டால் நவம்பர் 10ஆம் தேதி கன்னியாகுமரிக்கு முதலமைச்சர் வரும் போது போராட்டத்தில் ஈடுபட போவதாக மீனவ பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details