கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி தெற்கு பெருமாள்புரத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (41). கூலி தொழிலாளி. இவரது மனைவி ஈஸ்வரி (38). இவர்களுக்கு திருமணமாகி 14 வயதில் ரவீனா என்ற மகள் உள்ளார். இவர்கள் கடந்த 9 மாதங்களாக அஞ்சுகிராமம் பகுதியிலுள்ள ஸ்ரீ லட்சுமிபுரம் அஜந்தா சிட்டியில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
இவர் பலரிடம் கடன் பெற்று இருப்பதாக தெரிகிறது. கொடுத்த பணத்தை கடன் கொடுத்தவர்கள் திருப்பி கேட்டுள்ளனர். இதனால் மணிகண்டன் சில நாட்களாக மன அமைதியின்றி சுற்றித்திரிந்து வந்துள்ளார்.