தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதிதாக திறக்கப்பட்ட தொழில்முனைவோர் ஆய்வகம் - entrepreneurs lab opened in kanyakumari

கன்னியாகுமரி: மத்திய அரசின் அடல்டிங்கரிங் திட்டத்தின் கீழ் கொட்டாரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட தொழில் முனைவோர் ஆய்வகம் திறக்கப்பட்டது.

entrepreneurs-lab-opened-in-kanyakumari
entrepreneurs-lab-opened-in-kanyakumari

By

Published : Mar 18, 2020, 3:06 PM IST

மாணவர்களுக்கு தொழிற் கல்வியை ஊக்குவித்து தொழில் முனைவோராக மாற்றும் வகையில் முன்னாள் இந்தியப் பிரதமர் வாஜ்பாய் பெயரில் பிரதமர் மோடி அறிவித்த அடல்டிங்கரிங் திட்டத்தின் கீழ் கொட்டாரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட தொழில் முனைவோர் ஆய்வரங்கம் நேற்று தொடங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.

புதிதாகத் திறக்கப்பட்ட தொழில்முனைவோர் ஆய்வகம்

இந்த ஆய்வகத்தில் ரோபோ, 3டி பிரிண்டர், மெக்கானிக்கல் கருவிகள், எலக்ட்ரானிக் கருவிகள், தொலைநோக்கி கருவிகள், லேப்டாப் போன்ற பல்வேறு நவீன கருவிகளின் மாடல்கள் இடம்பெற்றன. இந்த ஆய்வரங்கம் மூலம் மாணவர்கள் இளம் விஞ்ஞானிகளாக உருவாக்கவும், புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கவும் உதவும் என கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க... 'மைதானம் போல் பள்ளியில் அறிவியல் ஆய்வகம் அமைங்க'

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details