தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குமரியில் கரோனா தொற்றால் பொறியாளர் உயிரிழப்பு! - பொறியாளர் கரோனா தொற்றால் உயிரிழப்பு

கன்னியாகுமரி: உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வெளிநாட்டிலிருந்து நாகர்கோவில் வந்த பொறியாளர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

குமரியில் கரோனா தொற்றால் பொறியாளர் உயிரிழப்பு
குமரியில் கரோனா தொற்றால் பொறியாளர் உயிரிழப்பு

By

Published : Apr 4, 2021, 5:56 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், வெளியூரிலிருந்து குறிப்பாக கேரளாவிலிருந்து வருபவர்களை எல்லைப் பகுதியான களியக்காவிளையில் சுகாதாரத்துறை அலுவலர்கள் சோதனை செய்து வருகின்றனர். சோதனையில், தொற்று உறுதி செய்யப்பட்டால் அவர்களைத் தனிமைப்படுத்தி, சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நாகர்கோவில் வடசேரி பகுதியைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர், வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். இவர், தனது உறவினரின் திருமணம் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக சொந்த ஊர் வந்தார்.

இவருக்கு கடந்த 2ஆம் தேதி நடத்தப்பட்ட கரோனா சோதனையில் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்தார்.

இருந்தபோதிலும், அவர் சிகிச்சைப் பலனின்றி இன்று (ஏப்.04) உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை உடற்கூராய்வுக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: கரோனா பாதுகாப்பு உபகரணங்கள் ரூ.54 கோடிக்கு கொள்முதல்!

ABOUT THE AUTHOR

...view details