தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொகுசு கார் திருடிய கஞ்சா வியாபாரி உள்பட 2 பேர் கைது - கன்னியாகுமரி சொகுசு கார் திருட்டு

கன்னியாகுமரி: மேற்கு ரதவீதியில் கொகுசு காரை திருடிய கஞ்சா வியாபாரி உள்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

drug dealer kanyakumari

By

Published : Sep 15, 2019, 10:42 AM IST

நெல்லை மாவட்டம், பழவூரைச் சேர்ந்தவர் பரமசிவம் (36). இவர், கன்னியாகுமரி மேற்கு ரத வீதியில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்திவருகிறார். இந்நிலையில், பரமசிவம் நேற்று இரவு தனது டிராவல்ஸ் நிறுவனம் முன்பு தனது சொகுசு காரை நிறுத்துவிட்டு வீட்டிற்குச் சென்றுள்ளார்.

இந்நிலையில், காலையில் வந்துபார்த்தபோது அங்கு நிறுத்தப்பட்டிருந்த சொகுசு காரை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பரமசிவம் காரை பல இடங்களிலும் தேடியுள்ளார். ஆனால், எங்கு தேடியும் கார் கிடைக்காததால் வேறுவழியின்றி கன்னியாகுமரி காவல் துறையினரிடம் புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் மேற்கொண்டு விசாரணை செய்துவந்தனர். இந்நிலையில், தென்தாமரைகுளம் அருகேயுள்ள தேங்காய்காரன் குடியிருப்பைச் சேர்ந்த அஜித் (21), சேர்மத்துரை (19) ஆகிய இளைஞர்கள் இந்தக் காரை திருடியிருப்பது தெரியவந்தது.

பின், காவல் துறைாயினர் இருவரையும் வலைவீசி தேடிவந்த நிலையில், கையில் பணம் இல்லாததால் திருடிய சொகுசு காரை நாகர்கோவில் ரயில் நிலையம் முன்பு நிறுத்திவிட்டு, ரயில் நிலையத்தினுள் சென்ற இளைஞர்கள் பயணிகளிடம் பிக்பாக்கெட் அடிக்க முயன்றுள்ளனர். அப்போது, ரயில்வே காவல் துறையினரிடம் வசமாக மாட்டிக்கொண்டனர்.

தொடர்ந்து, அவர்களிடம் நடத்திய விசாரணையில், கன்னியாகுமரியில் கொகுசு காரை திருடியதையும் பிக்பாக்கெட் அடிக்க முயன்றதையும் ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து, ரயில்வே காவல் துறையினர் அளித்த தகவலின்பேரில், கன்னியாகுமரி காவல் துறையினர் நாகர்கோவில் ரயில்நிலையம் சென்று அவர்களிடமிருந்து சொகுசு காரை மீட்டனர்.

பின்னர், அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில் அஜித் மீது ஏழிற்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகளும் சேர்மத்துரை மீது கஞ்சா கடத்திய வழக்கும் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, அவர்கள் இரண்டு பேரையும் கைது செய்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details