கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே தெருவுக்கடையை சேர்ந்தவர் ஜாபர் (24). இவர் களியக்காவிளையில் உள்ள தனியார் கண் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வந்தார்.
நேற்று (ஜுன்.17) மாலை இவர் பணி முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது திருத்துவபுரம் பகுதியில் உள்ள அபாயகரமான வளைவில் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் நிலைதடுமாறி விபத்துக்குள்ளானது.