தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 14, 2020, 11:44 PM IST

ETV Bharat / state

குமரியில் திறக்கப்பட்ட சலவைத் தொழிலாளர் ஓய்வறைக் கட்டடம்

கன்னியாகுமரி: மூத்தார்குளம் பகுதியில் ரூ. 3 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்ட சலவைத் தொழிலாளர் ஓய்வறை கட்டடத்தை எம்எல்ஏ ஆஸ்டின் திறந்து வைத்தார்.

dmk-mla opens a laundry worker restroom in kanyakumari disttrict
dmk-mla opens a laundry worker restroom in kanyakumari disttrict

கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரத்தை அடுத்துள்ள மூத்தார்குளம் பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சலவைத்தொழில் செய்து வருகின்றனர். நீண்ட காலமாக துணி துவைக்கும்போது ஓய்வெடுக்க ஒருஅறை வேண்டும் என்பது இவர்களது நீண்ட நாள் கோரிக்கை ஆகும்.

இதையடுத்து, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ.3 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஓய்வறை கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது. இதையடுத்து எம்எல்ஏ ஆஸ்டின், இந்த ஓய்வறையைத் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் தாமரை பாரதி, திமுக கட்சியினர், நிர்வாகிகள் உட்பட பலரும் பங்கேற்றனர்.

சலவைத் தொழிலாளர்கள் ஓய்வறைக் கட்டடம்

தங்களுடைய கோரிக்கையை ஏற்று ஓய்வறை கட்டித் தந்த எம்எல்ஏ-விற்கு சலவைத் தொழிலாளர்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் படிக்க: இலவச வீட்டு மனை பட்டா வேண்டும் - சலவைத் தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு !

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details