கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரத்தை அடுத்துள்ள மூத்தார்குளம் பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சலவைத்தொழில் செய்து வருகின்றனர். நீண்ட காலமாக துணி துவைக்கும்போது ஓய்வெடுக்க ஒருஅறை வேண்டும் என்பது இவர்களது நீண்ட நாள் கோரிக்கை ஆகும்.
இதையடுத்து, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ.3 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஓய்வறை கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது. இதையடுத்து எம்எல்ஏ ஆஸ்டின், இந்த ஓய்வறையைத் திறந்து வைத்தார்.