தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

100 தினக்கூலி குடும்பங்களுக்கு திமுக எம்எல்ஏ நிவாரணப் பொருட்கள் வழங்கல்! - குமரி மாவட்டச் செய்திகள்

குமரி: 144 தடை உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள சுமார் 100க்கும் மேற்பட்ட தினக்கூலி குடும்பங்களுக்கு திமுக எம்எல்ஏ ஆஸ்டின் சார்பில் அரிசி, காய்கறி உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.

100 தினக்கூலி குடும்பங்களுக்கு திமுக எம்எல்ஏ சார்பில் நிவாரணப் பொருட்கள்
100 தினக்கூலி குடும்பங்களுக்கு திமுக எம்எல்ஏ சார்பில் நிவாரணப் பொருட்கள்

By

Published : May 5, 2020, 9:11 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால், பொதுமக்கள் அரிசி, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, தினக்கூலி தொழிலாளர்கள், நிறுவனங்களில் பணியாற்றுவோர் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர்.

இதனைப் போக்கும் வகையில் குமரி மாவட்ட நிர்வாகம், நாகர்கோவில் மாநகராட்சி, தனியார் தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் சார்பில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை நிவாரண உதவியாக வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில் கன்னியாகுமரி தொகுதி திமுக எம்எல்ஏ ஆஸ்டின் சார்பில், மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள பொது மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி அஞ்சுகிராமம் பேரூராட்சிக்கு உட்பட்ட சிவராமபுரம் பகுதியில் 100 தினக்கூலி குடும்பங்களுக்கு காய்கறி, அரிசி உள்ளிட்ட நிவாரண உதவிகளை எம்எல்ஏ வழங்கினார். இதில் பேரூர் செயலாளர் இளங்கோ உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:

சேலத்தில் அதிமுக சார்பில் நிவாரணப் பொருள்கள் வழங்கல்

ABOUT THE AUTHOR

...view details