தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 18, 2020, 11:54 AM IST

ETV Bharat / state

அரசு ஊழியர்களுக்காக அரசுப் பேருந்துகள் இயக்கம்!

கன்னியாகுமரி: அரசு ஊழியர்களை பணிக்கு அழைத்துச் செல்வதற்காக அரசுப் பேருந்துகளை இயக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

அரசு ஊழியர்களுக்காக அரசுப் பேருந்துகள் இயக்கம்
அரசு ஊழியர்களுக்காக அரசுப் பேருந்துகள் இயக்கம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மாவட்டத்தில் தற்போது கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டுவருகிறது.

இதனால் குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் நாளை முதல் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஊழியர்களுக்குத் தேவையான போக்குவரத்து வசதியை ஏற்படுத்த அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

எனவே நிறுத்தப்பட்டுள்ள பேருந்துகளை மீண்டும் இயக்குவது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் ஆலோசித்துவருகிறது. தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் 50 சதவீத பேருந்துகளை போக்குவரத்துக் கழக அலுவலர்கள் தயார் நிலையில் வைத்துள்ளனர்.

குமரி மாவட்டத்தில் சுகாதாரப் பணியாளரை ஏற்றிச் செல்வதற்காக ஏற்கனவே மாவட்டம் முழுவதும் 10 பேருந்துகள் இயக்கிவருகிறது. அரசு ஊழியர்களையும் ஏற்றிச் செல்லும் வகையில் நாளை முதல் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரியவந்துள்ளது.

நாளை முதல் அரசு ஊழியர்களுக்காக பேருந்துகள் இயக்கப்படுவதால், விடுப்பில் இருக்கும் ஓட்டுநர்களை மீண்டும் பணிக்கு அழைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் சோமனூரிலிருந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை இன்று காலை 8:30 மணியளவில் அரசுப் பேருந்து இயக்கப்பட்டது. இதில் அரசு ஊழியர்கள் தங்களுடைய அடையாள அட்டையை காண்பித்து பயணச்சீட்டு எடுத்துக்கொண்டு பயணம் செய்தனர்.

முன்னதாக பேருந்தில் ஏறும் பயணிகளுக்கும் கிருமி நாசினி வழங்கப்பட்டது. தொடர்ந்து ஒவ்வொரு இருக்கைக்கும் இடைவெளிகளுடன் அரசு ஊழியர்கள் பேருந்தில் பயணம் செய்தனர். மேலும் அலுவலகம் முடிந்த பின்னர், மாலை அதே வழித்தடத்தில் அரசு ஊழியர்களுக்கு பேருந்து இயக்கப்படும் என போக்குவரத்து துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:பேருந்து மூலம் சொந்த ஊர் சென்ற அசாம் தொழிலாளர்கள்!

ABOUT THE AUTHOR

...view details