நாடு முழுவதும் ஊரடங்கால் மக்கள் வீடுகளில் முடங்கி வருமானம் இழந்து தவித்து வருகின்றனர். இதேபோல் சிறு, குறு வர்த்தக நிறுவனங்கள் மூடி ஒரு மாதத்திற்கு மேலாகிறது. இந்நிலையில் ஊரடங்கால் வீடுகளில் முடங்கி வருமானம் இழந்துள்ளனர். இந்நிலையில் வீடுகளுக்கும், வர்த்தக நிறுவனங்களும் மே மாதம் 6 தேதிக்குள் மின்சார கட்டணம் கட்ட மின்வாரியம் அறிவித்துள்ளது.
இதற்கு கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாத் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக ஜமாத் நிர்வாகிகள் கூட்டம் நாகர்கோவில் இடலாக்குடியில் நடைபெற்றது.