தமிழ்நாடு துணை முதலமைச்சரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வத்தின் 69ஆவது பிறந்தநாள் (ஜனவரி 14) விழா தமிழ்நாடு முழுவதும் அதிமுக தொண்டர்களால் கொண்டாடப்பட்டுவருகிறது.
அதன் ஒரு பகுதியாக குமரி மாவட்டம் நாகர்கோவிலில் அமைந்துள்ள பிரசித்திhdபெற்ற நாகராஜா கோயிலில் குமரி மாவட்ட அதிமுக சார்பில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
குமரி மாவட்ட செயலாளரும் மாவட்ட பால்வளத் துறை தலைவருமான அசோகன் தலைமையில் நாகராஜா சுவாமிக்கு பால், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது.