கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாயத்திற்கு நீராதாரமாக விளங்குவது பேச்சிப்பாறை அணை. கன்னியாகுமரி மாவட்டம் மட்டுல்லாது, நெல்லை மாவட்டத்தின் ராதாபுரம் தாலுகா பகுதிவரை விவசாயத்திற்கு பயன்படுகிறது.
குமரியில் பாசனத்திற்காக அணைகள் திறப்பு! - Kumari District News
கன்னியாகுமரி: குமரி மாவட்டத்தின் முக்கிய நீராதாரமான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகள் பாசனத்திற்காக திறக்கப்பட்டன.
பாசனத்திற்காக அணைகள் திறப்பு
இந்நிலையில் கன்னியாகுமரியில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தென்மேற்கு பருவமழை காரணமாக, அணைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் மாவட்டத்திலுள்ள அணைகளில் விவசாயத்திற்கு தண்ணீர் திறந்துவிடக்கோரி விவசாயிகள் கோரிக்கை வைத்து வந்தனர்.
இதையும் படிங்க:கொடுமணல் அகழாய்வு - பளிங்கு கற்கள், எலும்புகள், சுடுமண் பொருட்கள் கண்டெடுப்பு!