குமரி மாவட்டத்தில் கடந்த மூன்று வாரங்களாக கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. தினமும் 25 முதல் 50-க்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுவருகின்றனர்.
கேரளாவிலிருந்து வந்த மூன்று பேருக்கும். ஜார்கண்டிலிருந்து வந்த ஒருவருக்கும் கரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் ஒரேநாளில் கரோனா பாதிப்பு 107 ஆக அதிகரித்தது.
இந்நிலையில் நாகர்கோவில் கோட்டார் காவல் நிலையத்தில் பணியாற்றிய காவல் ஆய்வாளர் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து காவல் நிலையத்திற்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கிருமிநாசினி தெளித்து சுத்தம்செய்யப்பட்டது.
கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுவருகிறார்கள். நாகர்கோவில் நகரப் பகுதியில் மற்ற பகுதிகளைக் காட்டிலும் பாதிப்பு அதிகமாக இருந்துவருகிறது.