காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இன்று (டிச. 9) நாகர்கோவிலில் காங்கிரஸ் கட்சியினர் ராஜிவ்காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் இனிப்பு வழங்கி, ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கிழக்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர். ராதாகிருஷ்ணன் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.