தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தண்ணீர் தொட்டியில் மூழ்கி சிறுமி பலி, சிறுவனுக்கு தீவிர சிகிச்சை! - little girl drowns in a water tank

கன்னியாகுமரி: மயிலாடி பகுதியில் வீட்டின் தண்ணீர் தொட்டியில் மூழ்கி சிறுமி உயிரிழப்பு, சிறுமியின் சகோதரன் கயிரால் கழுத்து இறுக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தண்ணீர் தொட்டியில் மூழ்கி சிறுமி பலி, சகோதரர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை
தண்ணீர் தொட்டியில் மூழ்கி சிறுமி பலி, சகோதரர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை

By

Published : Feb 12, 2020, 7:36 AM IST

கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி அருகேயுள்ள மார்த்தாண்டபுரத்தைச் சேர்ந்தவர் செந்தில் (35). இவர் மயிலாடி பஞ்சாயத்தில் ஊழியராக வேலை செய்துவருகிறார். இவரது மனைவி அம்பிகா (32). இவர்களுக்கு சாம் சுந்தர் என்ற 7 வயது மகனும், சஞ்சனா என்ற 4 வயது பெண் குழந்தையும் உள்ளனர்.

நெல்லையில் உள்ள உறவினர் திருமணத்திற்கு அம்பிகா சென்றுள்ளார். குழந்தைகள் இருவரும் தந்தை செந்திலுடன் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். திருமணத்திற்குச் சென்ற அம்பிகா வீட்டிற்குவந்து பார்த்தபோது சிறுவன் சாம் சுந்தர் ஸ்கிப்பிங் விளையாடும் கயிறால் கழுத்து இறுகிய நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தான். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சிறுவனை மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுசென்றனர்.

இதற்கிடையில் சிறுமி சஞ்சனாவை அக்கம்பக்கத்தினர் தேடி பார்த்தபோது வீட்டில் இருந்த தண்ணீர் தொட்டியில் சடலமாக மிதந்துகொண்டிருந்ததை கண்டனர். இதுகுறித்து அஞ்சுகிராமம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் சிறுமியின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

தண்ணீர் தொட்டியில் மூழ்கி சிறுமி பலி, சகோதரர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை

மேலும் இதுகுறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்தும், குழந்தைகளின் தந்தையிடமும் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: குளத்தில் மூழ்கி தந்தை, இரண்டு மகன்கள் உயிரிழப்பு - போலீசார் விசாரணை

ABOUT THE AUTHOR

...view details