தமிழ்நாடு

tamil nadu

முதலமைச்சர் பங்கேற்கும் ஆய்வுக் கூட்டத்தை புறக்கணிக்க முடிவு - எம்எல்ஏ சுரேஷ்ராஜன்

By

Published : Oct 12, 2020, 12:38 AM IST

கன்னியாகுமரி: நாகர்கோவிலில் பாதாள சாக்கடை திட்டம், கூட்டுக் குடிநீர் திட்டம், சாலைகள் சீரமைத்தல் உள்ளிட்ட எந்த திட்டத்தையும் மேற்கொள்ளாத தமிழ்நாடு அரசை கண்டிக்கும் வகையில், முதலமைச்சர் பங்கேற்கும் ஆய்வுக் கூட்டத்தை புறக்கணிக்க உள்ளதாக நாகர்கோவில் எம்எல்ஏ சுரேஷ்ராஜன் அறிவித்துள்ளார்.

Chief Minister review meeting boycott
Chief Minister review meeting boycott

இது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்,

"நாகர்கோவில் தொகுதியில் கடந்த ஒன்பதரை ஆண்டுகளில் எந்த வளர்ச்சி பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. நாகர்கோவிலில் பாதாள சாக்கடை திட்டம், கூட்டுக் குடிநீர் திட்டம், சாலைகள் சீரமைத்தல், மீனவ கிராமங்களை பாதுகாக்க தூண்டில் வளைவு, கடலரிப்பு தடுப்புச் சுவர் அமைத்தல் உள்ளிட்ட எந்த பணிகளையும் முடிக்கவில்லை. ஆட்சி முடிய ஆறு மாதங்கள் உள்ள நிலையில், வளர்ச்சிப் பணி மேற்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை இல்லாததால் முதலமைச்சர் பங்கேற்கும் ஆய்வுக் கூட்டத்தை புறக்கணிக்க இருக்கிறேன்.

நாகர்கோவில் மாநகராட்சியில் 2015ஆம் ஆண்டுக்குள் முடிக்க வேண்டிய பாதாள சாக்கடை திட்டத்தை இதுவரை முடிக்கவில்லை. அழிக்கால் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளுக்கு தூண்டில் வளைவு, கடலரிப்பு தடுப்புச் சுவர் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்தும் இதுவரை பணிகள் தொடங்கவில்லை.

நீண்ட நாட்களாக அரசு ரப்பர் கழக தொழிலாளர்களின் ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெறாமல் உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தின் பெரும்பகுதி சாலைகள் பழுதடைந்துள்ள நிலையில், முதலமைச்சர் வருகை தரும் பகுதிகளில் உள்ள சாலைகள் சீரமைக்கும் பணி நடைபெறுகிறது" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details