தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அலுவலருக்கு ஐந்தாண்டு சிறை! - கன்னியாகுமரி முதன்மை குற்றவியல் நீதிமன்றம்

கன்னியாகுமரி: கல்குவாரி உரிமையாளரிடம் ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்ட அலுவலருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

Bribe case judgement

By

Published : Oct 16, 2019, 10:13 PM IST

கன்னியாகுமரி மாவட்டம், படந்தாலுமூடு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவர் காரக்கோடு பகுதியில் கல்குவாரி நடத்திவருகிறார். கடந்த 2011ஆம் ஆண்டு ஜூன் 13ஆம் தேதி கல்குவாரியிலிருந்து கல் எடுத்துச் செல்வதற்காக அனுமதி சீட்டு கேட்டு மாவட்ட கனிமவளத் துறை உதவி இயக்குநர் மாரிமுத்துவிடம் விண்ணப்பித்தார்.

அப்போது அனுமதிச்சீட்டு வழங்க ரூ.25 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என்று மாரிமுத்து கூறியுள்ளார். இதையடுத்து ரமேஷ்குமார் குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பு பிரிவு காவல்துறையினருக்கு தகவல் அளித்தார். அதன்பேரில், 2011ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி ரமேஷ்குமாரிடம், அலுவலர் மாரிமுத்துவுக்கு லஞ்சம் பெற்ற போது அவரை காவலர்கள் கைது செய்தனர்.

லஞ்சம் வாங்கிய கனிமவளத்துறை அதிகாரிக்கு முதன்மை குற்றவியல் நீதிமன்றம் 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினர்

இதுதொடர்பான வழக்கு மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அருணாசலம், மாரிமுத்துவுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

இதையும் படிங்க:

ஃபேஸ்புக்கில் மோடியை அவதூறாகச் சித்தரித்த இளைஞர் கைது

ABOUT THE AUTHOR

...view details