மத்திய அரசின் குடிநீர் வழங்கும் திட்டமான 'ஜல் ஜீவன்' திட்டத்தில் முறைகேடு நடப்பதாகக் கூறி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
'ஜல் ஜீவன் திட்டத்தில் முறைகேடு' - குமரியில் பாஜகவினர் போராட்டம்! - jal jeevan plan
கன்னியாகுமரி: மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தில் முறைகேடு நடப்பதாகக் கூறி பெருமாள்புரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
!['ஜல் ஜீவன் திட்டத்தில் முறைகேடு' - குமரியில் பாஜகவினர் போராட்டம்! பாஜக](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-9739447-1054-9739447-1606909146344.jpg)
பாஜக
அதன்படி, அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பும் ஏராளமான பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எம்.ஆர். காந்தி தலைமை வகித்தார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர் கலந்துகொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.