கன்னியாகுமரி மாவட்டம் பாலர்பள்ளி பகுதியைச் சேர்ந்த கலைக்கல்லூரி மாணவர் சேதுபதி நேற்று (செப்.6) இரவு பொறியியல் மூன்றாம் ஆண்டு படிக்கும் சுதிஷ் என்பவருடன் தனது இருசக்கர வாகனத்தில் அழகியமண்டபம் பகுதியில் உள்ள உணவகத்திற்குச் சாப்பிடச் சென்றுள்ளார்.
அங்கு சாப்பிட்டுவிட்டு இருவரும் மீண்டும் அழகியமண்டபத்திலிருந்து பாலர்பள்ளி நோக்கி வந்துகொண்டிருந்தனர். அப்போது பிலாங்காலை என்ற பகுதியில் ஆழ்துளை வாகனத்தின் மீது எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மோதியது.
இதில் சேதுபதி, சுதீஷ் ஆகியோர் தூக்கிவீசப்பட்டனர். இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.