தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 16, 2020, 12:20 PM IST

ETV Bharat / state

கன்னியாகுமரியில் திறக்கப்பட்ட பேக்கரிகள்!

குமரி: தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பேக்கரிகள் திறக்கப்பட்டன.

bakeries reopens in tamilnadu during curfew period
bakeries reopens in tamilnadu during curfew period

கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அத்தியாவசிய பொருள்கள் விற்பனைசெய்யும் கடைகளைத் தவிர அனைத்துக் கடைகளும் மூட உத்தரவிடப்பட்டது.

பின்னர், பொதுமக்களின் கோரிக்கையையடுத்து, தமிழ்நாட்டில் பேக்கரிகளும் இயங்கலாம் என அரசு அறிவித்ததையடுத்து, இன்று குமரி மாவட்டத்தில் பேக்கரிகள் வழக்கம்போல் செயல்பட்டன.

கன்னியாகுமரியில் திறக்கப்பட்ட பேக்கரிகள்

கடைகளிலிருந்த பழைய உணவுப்பொருள்கள் அனைத்தும் அகற்றப்பட்டு, புதிதான பொருள்கள் செய்யும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளிவிட்டு நிற்குமாறும், ஊழியர்கள் கையுறை, முகக் கவசங்கள் அணியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்தக் கடைகள் காலை ஆறு மணியிலிருந்து, மதியம் ஒரு மணிவரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:நிபந்தனைகளை மீறிய பேக்கரி - தேநீர் கடைகள்... சீல் வைத்த அலுவலர்கள்

ABOUT THE AUTHOR

...view details