கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோயிலுக்கு சொந்தமான தெப்பக்குளம் வடக்கு ரதவீதியில் அமைந்துள்ளது. இந்த குளத்திற்கு விவேகானந்தபுரத்தில் உள்ள குமரி சால்குளத்தின் உபரிநீர் மாதவபுரம், ஒற்றையால்விளை, விவேகானந்தபுரம், சர்ச்ரோடு வழியாக பகவதி அம்மன் கோயில் தெப்பக்குளத்தை வந்தடைகிறது.
இந்த கால்வாயில் பல இடங்களில் குழாய்கள் பதிக்கப்பட்டு குளத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. தற்போது குமரி மாவட்டத்தில் பெய்த தொடர்மழையில் குமரி மாவட்ட அணைகள் மற்றும் நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பிய போதும் இதுவரை தெப்பக்குளம் வறண்டே காணப்படுகிறது. இந்த தெப்ப குளத்திற்கு தண்ணீர் கொண்டு வர பக்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் சம்பந்தப்பட்டவர்கள் குளத்திற்கு தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கவில்லை.