பொதுமக்களின் ஆரோக்கியத்தை கருத்தில்கொண்டு தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்திவருகிறது. இதன் ஒரு பகுதியாக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் அம்மா மினி கிளினிக் என்ற பெயரில் சுமார் இரண்டாயிரம் கிளினிக்குகளை கிராமங்களில் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக குமரி மாவட்டம் தடிக்காரன்கோணம் ஆரம்ப சுகாதாரம் நிலையத்திற்குள்பட்ட காட்டுப்புதூர் கிராமத்தில் சுமார் ஐந்து லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட கட்டடத்தினை இன்று (டிச. 19) தமிழ்நாடு அரசு டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரம் குத்துவிளக்கு ஏற்றி திறந்துவைத்தார்.