தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆக்கிரமிப்பு அகற்றத்தின்போது 'தீக்குளிப்பேன்' என மிரட்டிய பெண் - நடந்தது என்ன? - தீக்குளிப்பேன் என பெண் மிரட்டல்

கன்னியாகுமரி: ஆதலவிளைப் பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டடங்களை பொதுப்பணித்துறையினர் இடித்தனர். அப்போது பொதுமக்களுக்கும் பொதுப்பணித்துறையினருக்கும் தகராறு ஏற்பட்டது. வீட்டின் கட்டடத்தை இடித்தால் தீக்குளிப்பேன் என பெண் ஆவேசமாக பேசியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஆக்கிரமிப்பு அகற்றும் பணி, தீக்குளிப்பேன் என பெண் மிரட்டல்!

By

Published : Sep 30, 2019, 7:55 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் ஆதலவிளைப் பகுதியில் பாசன கால்வாய் ஓடையை ஆக்கிரமித்து சிலர் கட்டடங்கள் கட்டியிருந்தனர். இதனை அகற்ற பொதுப்பணித்துறையினர் முடிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின்படி கடந்த பத்து நாட்களுக்கு முன்பு ஆக்கிரமிப்பை அகற்றுவதாக அப்பகுதி மக்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று பொதுப்பணித்துறை முதுநிலை வருவாய் ஆய்வாளர் ஜாக்குலின் தலைமையில் வந்த பொதுப்பணித்துறை அலுவலர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். அப்போது அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் பொதுப்பணித்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் தகராறு ஏற்பட்டது.

இதற்கிடையில் அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், வீட்டின் கட்டடத்தை இடித்தால் தீக்குளிப்பேன் என ஆவேசமாக பேசினார். இதைத்தொடர்ந்து பொதுமக்களும் ஆக்கிரமிப்பை அகற்றும் பணியை நடக்கவிடாமல் தடுத்து நிறுத்தினர்.

ஆக்கிரமிப்பு அகற்றும் பணி, தீக்குளிப்பேன் என பெண் மிரட்டல்!

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாசில்தார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் பொதுமக்கள் கலைந்துச்சென்றனர். பின் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியும் தொடர்ந்து நடைபெற்றது.


இதையும் படிங்க:'சாப்பாடு கூட தரவில்லை..அடித்து கொடுமைப்படுத்துகிறார்கள்'- கதறும் லாலு மருமகள்!

ABOUT THE AUTHOR

...view details