குமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த இறச்சகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன் (42). இவர் நாகர்கோவில் பகுதியில் உள்ள முத்து நீயூரோ என்ற தனியார் மருத்துவமனையில் சலவைத் தொழில் செய்துவந்தார்.
இந்நிலையில் இவர் நேற்று (அக். 14) மாலை மருத்துவமனையில் உள்ள மூன்றாவது மாடிக்குச் சென்றார். பின்னர் சிறிது நேரத்தில் அங்கிருந்து அவர் கீழே விழுந்தார். இந்தச் சத்தம் கேட்டு மருத்துவமனையில் இருந்த ஊழியர்கள் சென்று பார்த்தபோது அவர் பலத்த காயத்துடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு உள்ளே தூக்கிவந்து சிகிச்சை அளிக்க முயற்சித்தனர். அப்போது மருத்துவர்கள் ஐயப்பனைப் பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே இறந்துபோனது தெரியவந்தது.