கன்னியாகுமரி: சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமான சுற்றுலாப்பயணிகள் தினமும் வருகை தருகின்றனர். அதில் பண்டிகை காலங்கள், வார மற்றும் கோடை கால விடுமுறைகளில் வழக்கத்திற்கும் அதிகமான சுற்றுலாப்பயணிகள் கன்னியாகுமரிக்கு வருகை தருவது வழக்கம்.
இந்நிலையில் இன்று வார விடுமுறை தினத்தை முன்னிட்டு உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிநாட்டினர் என ஏராளமானோர் கன்னியாகுமரி கடற்கரையில் சூரிய உதயத்தைக்காண குவிந்தனர். சூரியன் கடலில் இருந்து வெளியே வந்ததும் சூரிய உதயத்தைப் பார்த்த சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சியில் ஆரவாரமிட்டனர்.