கன்னியாகுமரி மாவட்டம் கீழமணக்குடியைச் சேர்ந்தவர் ஜோசப். மீனவரான இவர், சின்னமுட்டம் புனித தோமையர் சங்கத்தைச் சேர்ந்த ஜெபஸ்டின் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மீன்பிடிக்கச் செல்வது வழக்கம்.
இந்நிலையில், இன்று காலையில் 11 பேருடன் ஜோசப் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளார். சுமார் 19 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அவர் திடீரென கை, கால் வலிப்பு ஏற்பட்டு சுயநினைவின்றி மயங்கி விழுந்தார்.