தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாயமான இளைஞர் சடலமாக மீட்பு - கொலையாளிகளுக்கு போலீஸ் வலைவீச்சு - Sriperumbudur Youth murder

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே கடந்த வாரம் மாயமான இளைஞர், கொலை செய்யப்பட்டு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

murder
murder

By

Published : Jul 8, 2020, 12:17 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் கச்சிப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ஜான்ரோஸ் (23). இவர் அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (25) என்பவருடன், கடந்த ஜூன் 26ஆம் தேதி வெளியே சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அச்சமடைந்த அவரது குடும்பத்தினர், இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் ஜான்ரோஸை தேடி வந்தனர்.

இந்நிலையில், ஸ்ரீபெரும்புதுார் அருகே போந்தூர் கிராமத்தில் உள்ள புதர்மண்டி பகுதியில் ஜான்ரோஸ் உடல் அழுகிய நிலையில் கிடந்துள்ளது. பின்னர் உடலை மீட்ட காவல் துறையினர், உடற்கூறாய்விற்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து காவல் துறையின் முதல்கட்ட விசாரணையில், ஜான்ரோஸ், கார்த்திக்குடன் போந்துார் கிராமத்திற்குச் சென்றபோது அப்பகுதியைச் சேர்ந்த சிலருடன் தகராறு ஏற்பட்டதில், ஜான்ரோஸ் அடித்துக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து காவலர்கள் கொலையாளிகளை தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:குரங்கை தூக்கில் தொங்கவிட்டு சித்ரவதைசெய்து கொன்ற மூவர் கைது

ABOUT THE AUTHOR

...view details