தமிழ்நாடு

tamil nadu

மதுபோதையில் மாடியிலிருந்து கீழே விழுந்த வட மாநில கூலித் தொழிலாளி உயிரிழப்பு

By

Published : Feb 12, 2021, 9:37 AM IST

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே வட மாநிலத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவர் மதுபோதையில் மாடியிலிருந்து கீழே விழுந்ததில் உயிரிழந்தார்.

Wage
Wage

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலம் பகுதியில் பிகாரைச் சேர்ந்த தினேஷ் மாத்தோ (50) நண்பர்களுடன் ஒரு வீட்டின் மாடிப் பகுதியில் தங்கி கீவளூர் பகுதியிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவந்தார்.

இந்நிலையில் கடந்த மூன்று நாள்களாகத் தொடர்ந்து உணவுகூட உண்ணாமல் அளவுக்கதிகமான மதுவை அருந்தியுள்ளார். மதுபோதையில் எதிர்பாராதவிதமாக வீட்டின் மாடியிலிருந்து கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்து விரைந்துசென்ற ஸ்ரீபெரும்புதூர் காவல் துறையினர் உயிரிழந்த தினேஷ் மாத்வோவின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: குடிபோதையில் தாயை பற்றி அவதூறு பேச்சு: நண்பரின் கண்ணை நோண்டி எடுத்த இளைஞர்!

ABOUT THE AUTHOR

...view details