தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊரடங்கை மீறி வெளியே சுற்றியவர்களின் வாகனங்கள் பறிமுதல்! - violating COVID-19 Curfew

காஞ்சிபுரம்: ஊரடங்கு விதிகளை மீறி சாலையில் சுற்றியவர்களின் வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.

வாகனங்கள் பறிமுதல்
வாகனங்கள் பறிமுதல்

By

Published : May 24, 2021, 10:57 AM IST

தமிழ்நாட்டில் கரோனா தொற்றை கட்டுப்படுத்த இன்று (மே.24) முதல் தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்திலும் ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது.

தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ள போலீசார்

காஞ்சிபுரம் நகரின் முக்கிய சாலையான மூங்கில் மண்டபம் சந்திப்பில் காவல்துறையினர் தடுப்புகளை ஏற்படுத்தி, தீவிர வாகன சோதனை செய்து வருகின்றனர். சோதனையின் போது, தொழிற்சாலைகளுக்கு செல்வதாகக் கூறி உரிய அனுமதி பெறாமல் சாலைகளில் சுற்றித்திருந்த 100க்கும் மேற்பட்டோரின் இருசக்கர வாகனங்களை துணை காவல் கண்காணிப்பாளர் மணிமேகலை தலைமையிலான காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ள போலீசார்

விதிமுறைகளை மீறி வந்தவர்களின் வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்வதுடன், வாகன ஓட்டிகளை எச்சரித்து அனுப்புகின்றனர்.

இதையும் படிங்க: நீலகிரியில் விளையும் பச்சை ஆப்பிள்: ஆர்வத்துடன் வாங்கிச் செல்லும் கர்ப்பிணிகள்

ABOUT THE AUTHOR

...view details