காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச் சாவடி வழியாக அதிகளவில் வாகனங்கள் சென்று வருவது வழக்கம். இதற்கு ஸ்ரீபெரும்புதூரில் அதிக எண்ணிக்கையில் அமைந்திருக்கும் தொழிற்சாலைகளும் ஒரு காரணம்.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஐந்து மாதங்களாக நடைமுறையில் இருந்த இ-பாஸ் முறையானது, இன்று முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சுங்க சாவடியில் வாகனங்கள் எண்ணிக்கை இன்று வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது.