காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே எழுச்சூரில் அமைந்துள்ள தொழிலாளர்கள் தங்கும் விடுதி கட்டடத்தில் கரோனா சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. தற்போது இங்கு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த சிகிச்சை மையத்தில் சுகாதார சீர்கேடு நிலவுவதாகவும், மருந்து மாத்திரைகள், முறையாக வழங்கவில்லை எனக் கூறி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அங்குள்ள ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.