காஞ்சிபுரம் தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாமக வேட்பாளர் மகேஷ் குமார் போட்டியிடுகிறார். இன்று மாலை 7 மணியுடன் தேர்தல் பரப்புரை நிறைவடைவதை யொட்டி அவர் தனது இறுதி கட்ட பரப்புரையாக, இருசக்கர வாகனங்களில் பேரணியாக சென்று வாக்கு சேகரித்தார்.
இதில் சுமார் 500க்கும் மேற்பட்ட பாமக, அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர். இருசக்கர வாகனத்தில் நின்றபடி பாமக வேட்பாளர் மகேஷ்குமார், பெரியார் நகர் பகுதியில் தொடங்கி செட்டி தெரு, ரங்கசாமி குளம், கீரை மண்டபம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பேரணி சென்றார்.