திருக்கழுக்குன்றத்தில் இன்று தமிழ்நாடு ஊராக புத்தாக்கத் திட்டம் தொடங்கப்பட்டது. இதனை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் தொடங்கிவைத்தார். இந்தத் திட்டமானது தமிழ்நாட்டின் 26 மாவட்டங்களில், 120 வட்டங்களில், 3 ஆயிரத்து 994 ஊராட்சிகளில் இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படும்.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 5 வட்டாரங்களில், 220 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் செங்கல்பட்டு மாவட்டத்தில் மூன்று வட்டங்களில் 119 ஊராட்சிகளிலும், திருக்கழுக்குன்றத்தில் 54 ஊராட்சிகள், திருப்போரூரில் 50 ஊராட்சிகள், புனித தோமையர் மலை 15 ஊராட்சிகள், காஞ்சிபுரத்தில் 2 வட்டாரங்களில் 101 ஊராட்சிகள், வாலாஜாபாத்தில் 16 ஊராட்சிகள் ஆகிய ஊராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.