தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கண்டைனர் லாரி மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு! - கண்டைனர் லாரி விபத்து

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அடுத்த நாவலூர் பகுதியில் கண்டைனர் லாரி மோதிய விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

accident
accident

By

Published : Jul 9, 2020, 12:01 AM IST

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மாங்கான்யம் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் வயது 30. இவர் அதே பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.

லாரி கண்டைனர்
இந்நிலையில் நேற்று (ஜூலை8) சங்கர் பணிக்கு செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் நாவலூர் பகுதியில் வெங்காட்டு சாலையில் ஓரியண்டல் லோட்டஸ் உணவகம் சப்ளைஸ் (பி) லிமிடெட் அருகில் வேகமாக சென்று கொண்டிருந்தார்.
அப்போது, எதிர்பாராதவிதமாக எதிரே வந்த கண்டைனர் லாரியின் மீது மோதியதில் தலையிலும் வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்தில் நொறுங்கிய இருசக்கர வாகனம்
பின்னர் தகவலறிந்து விரைந்து வந்த ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் அவரின் உடலை கைப்பற்றி ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய கண்டெய்னர் லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.
கண்டைனர் லாரி மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details