தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 27, 2021, 10:43 PM IST

ETV Bharat / state

'ஏ கிளாஸ்' அறை கேட்ட சிவசங்கர் பாபா - 'நோ' சொன்ன நீதிமன்றம்

சிறையில் கூடுதல் வசதிகொண்ட 'ஏ கிளாஸ்' அறை வழங்கக் கோரிய சிவசங்கர் பாபா மனுவை, செங்கல்பட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

sivasankar
சிவசங்கர் பாபா

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாககம் தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி காவல் துறையினரால் அதன் நிறுவனர் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், அவர் சிறையில் கூடுதல் வசதிகொண்ட ஏ கிளாஸ் அறை வழங்க வேண்டும் எனக் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

அவரது மனுவை விசாரித்த செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம், அதனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதையும் படிங்க:100 கோடி ரூபாய் மோசடி வழக்கு - சிபிஐ அதிரடி சோதனை!

ABOUT THE AUTHOR

...view details