காஞ்சிபுரம்:கரோனோ வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கையாக இரவு நேர ஊரடங்கு இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. கோயில் நகரம், பட்டு நகரம், சுற்றுலா நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரத்திற்கு நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான வெளிமாநில, வெளி மாவட்ட பயணிகள் பட்டுப் புடவைகளை எடுப்பதற்கும், கோயில்களை சுற்றிப் பார்ப்பதற்கும், வந்து செல்லும் நிலையில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதால் பேருந்து போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்திலிருந்து பெங்களூருக்கு செல்ல மதியம் 3 மணிக்கு கடைசி பேருந்து இயக்கப்படும் என்றும், அதேபோல திருப்பதிக்கு இரவு 8 மணி வரை மட்டுமே இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.