காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்குட்பட்ட ஏனாத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மழைநீர் சேகரிப்பு மற்றும் குடிநீர் பரிசோதனை விழிப்புணர்வு முகாம் ஆர்பிடி பொதுத் தொண்டு நிறுவனம் மூலம் நடைபெற்றது.
தனியார் தொண்டு நிறுவன தலைவர் தங்கராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு முகாமில், நீர் உற்பத்தியாகும் முறை, அவை அடையும் நிலைகள், நீரின் தன்மைகள், பாதுகாக்கப்பட்ட குடிநீர் என்றால் என்ன? குடிநீரை எவ்வாறு பாதுகாப்பது, மழைநீர் சேகரிப்பின் அவசியம் பற்றி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விளக்கங்கள் அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.