காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வெங்காடு ஊராட்சிக்குட்பட்ட இரும்பேடு பகுதியைச் சேர்ந்தவர் சத்திய மூர்த்தி. இவரது மனைவி புவனா(22).
இவர்களுக்கு திருமணமாகி மூன்று வருடங்கள் ஆகியது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இதற்கிடையில், புவனா ஆறுமாத கர்ப்பிணியாக இருந்தார்.
இந்நிலையில் சத்தியமூர்த்தி அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து புவனாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதேபோல் நேற்றும் புவனாவுக்கும், சத்தியமூர்த்திக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த புவனா வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.