தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நிலத்தகராறு: கைம்பெண்ணின் வீட்டை சேதப்படுத்திய நபருக்கு வலைவீச்சு! - Widow house damage

காஞ்சிபுரம்: கணவரை இழந்த பெண்ணின் வீட்டை சேதப்படுத்தியவர்களை காவல் துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர்.

கணவனை இழந்த பெண்ணின் வீடு சேதம்
கணவனை இழந்த பெண்ணின் வீடு சேதம்

By

Published : Jul 14, 2020, 2:18 AM IST

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் தாலுகா மேவளூர்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரா. கணவரை இழந்த இவர் தன் இரண்டு மகள்களுடன் மேவளூர்குப்பம் கிராமத்தில் தனது பூர்வீகமான இடத்தில் அமைத்துள்ள குடிசையில் வாழ்ந்துவருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவர் அந்த இடத்திற்கு உரிமை கொண்டாடியுள்ளார். அதன் காரணமாக இருதரப்பினரும் இடம் சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர்.

இந்நிலையில் சக்திவேல் வெளியூர் அடியாள்கள் 20 பேருடன் சந்திரா வசித்த குடிசை வீட்டிற்கு வந்து அவர்கள் வீட்டினுள்ள பாத்திரம், பண்டங்கள் என அனைத்து பெருள்களையும் வெளியே எடுத்து வீசினர். அதன்பின்னர் குடிசையை பிரித்துப் போட்டுவிட்டு சென்றனர். இச்சம்பவத்தின் போது சந்திரா மற்றும் அவரது மகள்கள் மூவரும் சேர்ந்து சக்திவேலின் செயலை தடுக்க முயன்றனர். ஆனால் சக்திவேல் அவர்களை தாக்கி காயப்படுத்தினார்.

இதுகுறித்து சந்திராவின் மகள் மேனகா ஸ்ரீபெரும்புதூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்புகாரின்பேரில் ஸ்ரீபெரும்புதூர் காவல் துறை விசாரணை மேற்கொண்டு வழக்குப்பதிவு செய்தனர். மேலும் குடிசை வீட்டை சேதப்படுத்திவிட்டு தலைமறைவான சக்திவேலையும், அவரது அடியாட்களையும் காவல் துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:தவறி விழுந்த செல்போன்; பாறைக்குள் சிக்கிக்கொண்ட தலை - சிறுவனைப் போராடி மீட்ட தீயணைப்பு வீரர்கள்!

ABOUT THE AUTHOR

...view details