காஞ்சிபுரம்: பல்வேறு பகுதிகளில் செயின் பறிப்பு, இருசக்கர வாகன திருட்டில் ஈடுபடும் நபர்களை கண்காணிக்கவும்; அவர்களைக் கைது செய்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம். சுதாகர் காவல் துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
காணாமல் போன யமஹா ஆர்15
அதன் பேரில் காவல் துறையினர் தொடர்ந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர். இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகம் அருகே, தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் சதீஷ் என்பவரின் விலை உயர்ந்த, புதிய யமஹா ஆர்15 இரு சக்கர வாகனத்தை இரண்டு இளைஞர்கள் கடந்த ஜூலை ஏழாம் தேதி திருடி சென்றனர்.
இது குறித்து சதீஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரின் பேரில் காஞ்சிபுரம் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளின் உதவியோடு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வலை வீசி தேடி வந்தனர்.
பிடிபட்ட கொள்ளையர்கள்
இந்நிலையில் காஞ்சிபுரம் அருகே சிறுகாவேரிப்பாக்கம் பகுதியில் நேற்று (ஜூலை 8) ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர், அவ்வழியே சந்தேகத்திற்கு இடமாக இரு சக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்களை மடக்கிப் பிடித்தனர்.