காஞ்சிபுரம் மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அடுத்த எடையாளம் பகுதியில் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில், பழைய எடையாளம், புதிய எடையாளம் என இரண்டு கிராமங்கள் உள்ளன. இந்த இரண்டு கிராம மக்களும் ஒரே சுடுகாட்டை பயன்படுத்துகின்றனர். மூன்று ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த சுடுகாடு ஆற்றங்கரையோரம் உள்ளது.
இந்நிலையில், சுடுகாட்டு பகுதியில் இருந்த அரிச்சந்திரன் கோயிலை இடமாற்றம் செய்து, அப்பகுதியில் ஏழுமலை என்பவர் விவசாயம் செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதனோடு மூன்று ஏக்கர் பரப்பளவில் உள்ள சுடுகாட்டையும் ஆக்கிரமித்து, கிணறு வெட்டி விளைநிலமாக மாற்றியுள்ளார். மூன்று ஏக்கராக இருந்த சுடுகாடு, வெறும் 50 சென்ட் நிலமாக மாறியுள்ளது.