காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மாத்தூர் கபிலன் தெருவில் வசித்துவருபவர் சரவணன். இவரது மகன் பார்த்திபன் (23) ஒரகடத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்துவருகிறார்.
இந்நிலையில் இன்று (அக் 16) வேலைக்குச் சென்ற பார்த்திபன் வேலை முடித்துவிட்டு ஒரகடத்திலிருந்து தன் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் மாத்தூர் சர்வீஸ் சாலையில் வரும்போது பின்னால் வந்த லாரி மோதியதில் கீழே விழுந்துள்ளார். பின் அவர் மீது லாரியின் சக்கரம் ஏறியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பார்த்திபன் உயிரிழந்தார்.