தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மிதிவண்டி மீது பேருந்து மோதல்: ஒருவர் உயிரிழப்பு! - One person dead when a bus collided with a bicycle in kancheepuram

காஞ்சிபுரம்: ஒரகடம் அருகே சாலையின் ஓரம் மிதிவண்டியில் சென்றுகொண்டிருந்தவர் மீது தனியார் தொழிற்சாலை பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார்.

மிதிவண்டி மீது பேருந்து மோதி விபத்து  மிதிவண்டி மீது பேருந்து மோதி ஒருவர் பலி  காஞ்சிபுரம் பேருந்து விபத்து  Kancheepuram Bus Accident  Bus collides with bicycle  One person dead when a bus collided with a bicycle in kancheepuram  Bus Accident
Kancheepuram Bus Accident

By

Published : Feb 23, 2021, 1:57 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பால்நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் ஒரகடம் சாலை ஓரம் தனது வீட்டிற்கு மிதிவண்டியில் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது, தனியார் தொழிற்சாலைப் பேருந்து ஒன்று எதிர்பாராதவிதமாக மிதிவண்டி மீது மோதியதில், ஜெயக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த ஒரகடம் காவல் துறையினர் விபத்தில் உயிரிழந்த ஜெயக்குமாரின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் இவ்விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணைை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க:உ.பி.யில் தொடரும் வன்முறைச் சம்பவங்கள் - இளம் பெண் மீது திராவகம் வீச்சு!

ABOUT THE AUTHOR

...view details