காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே திருமுக்கூடல் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் முனியாண்டி தலைமையிலான பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
வாலாஜாபாத் அருகே ரூ. 2.93 லட்சம் பறிமுதல் - உரிய ஆவணங்கள் இல்லாத பணம் பறிமுதல்
காஞ்சிபுரம் : திருமுக்கூடல் பகுதியில் உரிய ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட 2 லட்சத்து 93 ஆயிரம் ரூபாய் பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.
![வாலாஜாபாத் அருகே ரூ. 2.93 லட்சம் பறிமுதல் வாலாஜாபாத் அருகே திருமுக்கூடல் பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ. 2 லட்சத்து 93 ஆயிரம் பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11080201-thumbnail-3x2-ele.jpg)
வாலாஜாபாத் அருகே திருமுக்கூடல் பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ. 2 லட்சத்து 93 ஆயிரம் பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது
அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நாகராஜன் எனபவரை நிறுத்தி காவல்துறையினர் சோதனையிட்டனர் . சோதனையில் உரிய ஆவணங்களின்றி 2 லட்சத்து 93 ஆயிரம் பணம் ரூபாய் கொண்டு வரப்பட்டது தெரிய வந்தது. உடனடியாக பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க:நீங்கள் வானதிக்கு வாக்களித்தால் 'சும்மா கிழி கிழி கிழி!' - கலா மாஸ்டர் கலகல...!