தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

6 வயது மகளுக்கு விஷம் கொடுத்த தாய் தற்கொலை! - சாலவாக்கம்

காஞ்சிபுரத்தில் தனது ஆறு வயது மகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த தாய் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

6 வயது மகளுக்கு விஷம் கொடுத்த தாய் தற்கொலை
6 வயது மகளுக்கு விஷம் கொடுத்த தாய் தற்கொலை

By

Published : Jun 23, 2021, 2:38 PM IST

காஞ்சிபுரம்: வாலாஜாபாத் அடுத்த உள்ளாவூர் கிராமம் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் முருகன். இவர், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வ்ருகிறார். இவரது மனைவி உமா (35). இவர்களுக்கு ஆறு வயதில் மகள் உள்ளார். இவர்கள் இருவரும் குடும்ப பிரச்சினை காரணமாக ஒரே வீட்டிற்குள் தனித்தனியாக சமையல் செய்து வசித்து வந்துள்ளனர்.

இதனால், கடந்த சில தினங்களாகவே மன உளைச்சளில் இருந்த உமா நேற்று (ஜூன் 22) வீட்டில் கணவர் இல்லாதபோது, வீட்டின் கதவை மூடிவிட்டு தனது ஆறு வயது மகளுக்கு டீயில் விஷத்தை கலந்து கொடுத்து விட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை தீர்வல்ல

இதனையறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக சாலவாக்கம் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், கதவை உடைத்துக்கொண்டு வீட்டினுள் சென்றனர்.

அங்கு, தற்கொலை செய்து கொண்ட உமா, அவரது பெண் குழந்தை ஆகியோரது சடலத்தை மீட்ட காவல் துறையினர், உடற்கூராய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அவரது கணவர் முருகனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:தாயின் தற்கொலை முயற்சியால் 2 குழந்தைகள் பலி

ABOUT THE AUTHOR

...view details