காஞ்சிபுரம்: வாலாஜாபாத் அடுத்த உள்ளாவூர் கிராமம் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் முருகன். இவர், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வ்ருகிறார். இவரது மனைவி உமா (35). இவர்களுக்கு ஆறு வயதில் மகள் உள்ளார். இவர்கள் இருவரும் குடும்ப பிரச்சினை காரணமாக ஒரே வீட்டிற்குள் தனித்தனியாக சமையல் செய்து வசித்து வந்துள்ளனர்.
இதனால், கடந்த சில தினங்களாகவே மன உளைச்சளில் இருந்த உமா நேற்று (ஜூன் 22) வீட்டில் கணவர் இல்லாதபோது, வீட்டின் கதவை மூடிவிட்டு தனது ஆறு வயது மகளுக்கு டீயில் விஷத்தை கலந்து கொடுத்து விட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனையறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக சாலவாக்கம் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், கதவை உடைத்துக்கொண்டு வீட்டினுள் சென்றனர்.