சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைப் பொதுக்கணக்குக் குழுவினர் இன்று (டிசம்பர் 10) காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர், மாங்காடு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை தலைமையில் ஆய்வுமேற்கொண்டனர்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் மா. ஆர்த்தி முன்னிலையில் அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய தணிக்கைக் குழுவின் அறிவுறுத்தலின்படி நடந்துகொள்ளுமாறு அனைத்துத் துறை அலுவலர்களும் அறிவுறுத்தப்பட்டனர்.
ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை செய்தியாளரிடம் பேசுகையில், “கடந்த இரண்டு நாள்களாக தமிழ்நாடு சட்டப்பேரவைப் பொதுக்கணக்குக் குழுவினர் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஆய்வுமேற்கொண்டு அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கிவருகின்றனர்.