தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் ஏழை எளியவர்களுக்கு மின் இணைப்பு வழங்கப்படும் - அமைச்சர் தா.மோ.அன்பரசன் - குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா மோ அன்பரசன்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நீர் நிலை, புறம்போக்கு நிலத்தை தவிர்த்து மற்ற புறம்போக்கு நில வகைப்பாட்டில் மின் இணைப்பு இல்லாமல் தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்கப்படும் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் தா.மோ.அன்பரசன்
அமைச்சர் தா.மோ.அன்பரசன்

By

Published : Jun 26, 2022, 1:14 PM IST

காஞ்சிபுரம்: வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பல்வேறு துறைகளின்கீழ் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று (ஜூன் 25) மாவட்ட ஆட்சியர் எம்.ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

விழாவில் பேசிய அவர், "காஞ்சிபுரம் மாவட்டத்தில் தாலுகா மற்றும் ஒன்றியத்தில் உள்ள நீர் நிலை, புறம்போக்கு நில வகைப்பாட்டில் இல்லாமல் நத்தம் புறம்போக்கு, மேய்க்கால் புறம்போக்கு, கிராம நத்தம் உள்ளிட்ட நில வகைப்பாட்டில் மின் இணைப்பு பெற முடியாமல் அவதிப்படும் ஏழை எளிய மக்களை கணக்கெடுத்து அங்கு வசிப்பவர்களுக்கு மின் இணைப்பு பெறவேண்டி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தடையில்லா சான்றிதழ் அளிக்கப்படும்.

இதன்மூலம் அவ்வாறு வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு மின்சாரத்துறை மூலம் உடனடியாக மின் இணைப்பு வழங்கப்படுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மின் இணைப்பு இல்லாமல் இருளில் தவிக்கும் ஏழைகளின் வாழ்வில் மின் விளக்கு ஏற்றப்படும்" என்றார்.

பின்னர் அமைச்சர் தா.மோ.அன்பரசன், 312 பயனாளிகளுக்கு ரூ.4.83 கோடி மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டாக்களும், சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் 100 பயனாளிகளுக்கு ரூ.12 லட்சம் மதிப்பிலான உதவித்தொகைகளும், 20 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகளும், குடிசை மாற்று வாரியம் சார்பில் 116 பயனாளிகளுக்கு ரூ.2.44 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். அத்துடன் மேலும், மகளிர் திட்டத்தின் சார்பில் 31 பயனாளிகளுக்கு ரூ.1.90 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும் என மொத்தம் 764 பயனாளிகளுக்கு ரூ.10.02 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் க.செல்வம் எம்பி, க.சுந்தர் எம்எல்ஏ, சி.வி.எம்.பி.எழிலரசன் , மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் படப்பை ஆ.மனோகரன், வாலாஜாபாத் ஒன்றியக் குழுத் தலைவர் தேவேந்திரன், மாவட்ட வருவாய் கோ.சிவ. ருத்ரய்யா மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பல்வேறு துறை அரசு அலுவலர்கள், பயனாளிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: புறம்போக்கு நிலத்தைவிட்டு வெளியேறினால் மாற்று இடம் வழங்க தயார் - அரசு உத்தரவாதம்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details